Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ்துமஸ் பண்டிகை குடில்கள், ஸ்டார்கள் அமைத்து கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை குடில்கள், ஸ்டார்கள் அமைத்து கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில்  ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும்  அங்கு இடம் பெற்றிருக்கும்.
 
வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மின்னிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டமும் நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனியனே என்று திட்டக் கூடாது என கூற காரணம் என்ன?