குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளின் சிறப்பு
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர்.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்
1.1.1 கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
எழுத்துக்கள் எல்லாம் எப்படி அகரத்தை அடிப்படையாக கொண்டு இருக்கின்றனவோ, அதுபோல உலகமானது கடவுளை அடிப்படையாக கொண்டு இருக்கின்றது.