Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோட்டலில் வைத்து அப்படி செய்தார்..இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பகீர் புகார்

ஹோட்டலில் வைத்து அப்படி செய்தார்..இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பகீர் புகார்
, திங்கள், 12 நவம்பர் 2018 (07:49 IST)
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில்  தனக்கு தென்னிந்திய இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், "தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். தனது புதிய படத்தில் நடிப்பவர்களுக்கான ஆடிஷன் நடப்பதால், அதில் பங்கேற்கும்படி என்னை அழைத்தார். இயக்குனரின் அழைப்பை ஏற்று ஓட்டலுக்கு சென்றேன். அங்கு ஒரு அறையில் இருந்த இயக்குனர்,  உள்ளே சென்ற என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார். 
 
பிறகு ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. என்றாலும், விரைவில் ஆடிஷன் முடிந்துவிடும் என்று நினைத்து காத்திருந்தேன். பிறகு அந்த இயக்குனர் என்னை நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார்.

அவர் தன் படத்துக்காகத்தான் ஆடிஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டால் போதும் என்று முடிவு செய்து, எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை" இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒட்டுமொத்த நடிகர்களுமே இந்த ஆட்சியை எதிர்ப்பது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி