Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (10:26 IST)
இந்தோனேசியாவில் பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுற்றுலா பேருந்தில் தங்களது சுற்றுலாவை கழிக்க சென்றுள்ளனர். மலை பிரதேசமிக்க அந்த இடத்தில் ஏராளமான வளைவுகள் இருந்தது. ஒரு வளைவில் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வளைக்க முயற்சித்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 98 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் பலியாகினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழிசை முன்பே காசு வேணும் என சொன்ன கராத்தே தியாகராஜன்/ பெரும் பரபரப்பு..!

துபாயில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை

மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

திமுக திமிர் பேச்சுக்கள்.. கதிர் ஆனந்த் பவுடர் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி..!

பிரதமர் வேட்பாளர் மனு ஏற்பு-கமெடிக்கு அளவே இல்லாமல் அள்ளி விடும் சுயோட்சை வேட்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments