சூடான சுவையான சேமியா இட்லி செய்வது எப்படி?

சேமியாவை கொண்டு விதவிதமான பலவகை உணவுகளை செய்யலாம். அதில் சுவையான ஒன்றுதான் சேமியா இட்லி. சூப்பரான சுவையான சேமியா இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சேமியா, அரிசி மாவு, தயிர், வெங்காயம், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், நெய், மஞ்சள் தூள், உப்பு,

தாளிக்க: கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, வரமிளகாய், முந்திரி, பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை

வாணலியில் நெய்விட்டு சேமியாவை வறுக்க வேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவை வறுக்க தேவையில்லை.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பொடியாக் நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சேமியாவையும் சேர்த்து கிளற வேண்டும்.

கிளறிய சேமியாவோடு தயிர் மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கிளறி அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் இட்லி பாத்திரத்தில் நெய் தடவி சேமியா கலவையை ஒரு கரண்டியில் எடுத்து இட்லி ஊற்றுவது போல ஊற்றி அவித்தால் சுவையான சேமியா இட்லி தயார்.

வெயிலுக்கு குளிர்ச்சியாக சாத்துக்குடி சர்பத் ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-