நாம எடுக்கிறதுதான் படம், நாம சொல்றதுதான் கதை என்று அடுத்தடுத்து அடிதடி படங்களில் நடித்து தொடர் தோல்விகளை சந்தித்தவர் கார்த்தி.
அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு, நாம சொல்வதாலேயே ஒரு விஷயம் கதையாகாது, நாம எடுப்பதாலேயே அது படமாகாது என்ற உண்மை அவருக்கும் ஸ்டுடியோ கிரீனுக்கும் புரிய வந்தது.
அதையடுத்து, நிறுத்தி நிதானமாக யோசித்து செய்த மெட்ராஸ், கொம்பன் இரண்டுமே ஹிட்.
அடுத்து அவர் நடிப்பது, கஸ்மோரா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், கஸ்மோராவின் இயக்குனர். இது, சயின்ஸ் ஃபிக்ஷன் என்று ஒரு தகவல் உள்ளது. காமெடிக்கு படத்தில் பிரதான இடமிருக்கிறது. கார்த்தி இதுவரை நடித்தப் படங்களிலேயே இதற்குத்தான் அதிக பட்ஜெட்டாம்.
ஆயிரத்தில் ஒருவனை விடவா என்றால், ஆம் என்கிறார்கள்.