Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரங்க வேட்டை சம்பள பாக்கி: மனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (20:16 IST)
ஹெச்.வினோத் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படம் நல்ல  வரவேற்பை பெற்றது. இப் படத்தின் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

 
இதில் நடிகர் அரவிந்த்சாமி, திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தை நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா தயாரித்துள்ளார்.
 
இப்படம் நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் உள்ளது.  இந்நிலையில் அரவிந்த்சாமி தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வரவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் தனக்கு வரவேண்டிய  ரூ.1.79 கோடி தரக்கோரி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் படத்தின் வெளியீட்டை தடுப்பது தங்களது நோக்கமல்ல. எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை தந்தால் போதும் என அரவிந்த்சாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இவ்வழக்கை வரும் 20ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன்… ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கமடைந்து விழுந்தேன்.. சமந்தா சொன்ன ஷாக்கிங் தகவல்!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மனைவிவின் கார் திருட்டு.. டெல்லி காவல்துறையில் புகார்..!

இன்வெஸ்டி கேட்டிவ் த்ரில்லர் “ஆபிரகாம் ஓஸ்லர்” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments