Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணத்தின் கழுத்திலிருந்த நகையை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (09:04 IST)
தேனியில் பிணத்தின் கழுத்திலிருந்த நகையை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்டுவதற்கு கஷ்டப்படுவதை விட தங்களிடம் இருக்கும் பணம் பொருளை பாதுகாப்பதற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணமே அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் தான்.
 
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்த போலீஸ்காரரான அழகுதுரைக்கும் அவரது மனைவி ஜெயமணிக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஜெயமணி தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த ஆம்புலன்ஸின் டிரைவர் சிவக்குமார் ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை திருடியுள்ளார்.
 
இதனையறிந்த ஜெயமணியின் உறவினர்கள், சிவக்குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஒரு பிணத்தின் கழுத்தில் இருந்த நகையை திருடிய இந்த கேடு கெட்ட ஜென்மத்தை என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை...

தொடர்புடைய செய்திகள்

போன் பண்ணி ஓட்டு கேட்டு, G Payவில் பணம் அனுப்பும் அண்ணாமலை! – திமுகவினர் பரபரப்பு புகார்!

துபாயில் பேய் மழை..! விமான சேவை பாதிப்பு.! முடங்கியது மக்களின் வாழ்க்கை..!!

1 ஓட்டு போட்டால் பாஜகவுக்கு 2 ஓட்டு என்பதில் உண்மை இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்.

துபாய் கனமழை "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

24 மணி நேர கெடு முடிந்தது.. எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

அடுத்த கட்டுரையில்
Show comments