Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ சுரங்கத்திலும் சேவை: ரிலையன்ஸ் ஜியோ!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (13:20 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கத்திலும் துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் இதோ...
 
சென்னையில் மாநகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது, கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. 
 
இதில், திருமங்கலம் - நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் ரயில் பயணிப்பதால் 7.6 கிமீ தூரத்திற்கு பயணிகளுக்கு மொபைல் நெட்வொர்க் இல்லாமல் இருந்தது. இதனை தற்போது ஜியோ நிறுவனம் சரிசெய்துள்ளது. 
 
பயணிகளுக்கு தடையின்றி செல்போன் சேவையை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் நவீன கருவிகளை அமைத்து உள்ளது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இனி நெட்வொர்க் பிரச்சனை வராது. 
 
கூடிய விரைவில் ஏர்டெல், வோடபோன் உள்பட மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் துவங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாமக டி சர்ட் போட்ட இளைஞர்கள்.. அம்பேத்கர் சிலை பெட்ரோல் குண்டு குறித்து வன்னி அரசு அதிர்ச்சி தகவல்..!

15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..! வெப்ப அலை வீசும்.! வானிலை மையம் எச்சரிக்கை..!

திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

வட மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பு..!

பெரும் பணக்காரர்களின் பணம் மீட்கப்படும்.! மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.! ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments