Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:27 IST)
நைஜீரியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா லபியாவில் உள்ள ஒரு எரிவாயு சேமிப்பு கிடங்கில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி சத்தம் எழும்பியது. இதனைத்தொடர்ந்து பயங்கரமாக தீ விபத்தும் ஏற்பட்டது. 
 
நிலைமையை சுதாரிப்பதற்குள்ளேயே அப்பகுதியில் இருந்தவர்கள் மீதும் அவ்வழியாக சென்றவர்கள் மீது தீ பரவியது இதில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர்  தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சேமிப்புக் கிடங்குகளை ஒழுங்கப்படுத்த அரசு முன்வராத காரணத்தாலேயே  இந்த விபத்து நடந்திருப்பதாக என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments