Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு ஆயுதம் முழுவதுமாக ஒழிக்கப்படும் - வட கொரிய அதிபர் கிம் உறுதி

அணு ஆயுதம் முழுவதுமாக ஒழிக்கப்படும் - வட கொரிய அதிபர் கிம் உறுதி
, செவ்வாய், 12 ஜூன் 2018 (12:20 IST)
வடகொரியாவில் உள்ள அணுஆயுத கிடங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்தனர். 
 
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா என்ற ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில்  பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், வட கொரியாவில் உள்ள  அணு ஆயுத கிடங்குகள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்தார். மேலும் இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்றும் கிம் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்