Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய மாற்றம் : சீனாவுடன் இந்தியா முதல் ஒப்பந்தம்...

புதிய மாற்றம் : சீனாவுடன் இந்தியா முதல் ஒப்பந்தம்...
, புதன், 17 அக்டோபர் 2018 (15:21 IST)
நமது அண்டை நாடு சீனா. அவ்வப்போது எல்லைத்தகறாரு காரணமாக முடு மோதல் இருந்து வந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று சீனாவிடம் இந்தியா கண்டிப்பு காட்டுவது கிடையாது.
சுதந்திரம் அடைந்த போதிலிருந்தே இந்த எல்லை பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதுநாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் எங்கலுக்கு தான் என்று உரிமை கொண்டாடி வரும் சீனாவிற்கு இந்தியாபேச்சு வார்த்த மூலம் தீர்வு காண நினைத்தது.
 
இந்நிலையில் சீனா உள்துறை அமைச்சர் ஜோகெஸிவரும் 22ஆம் தேதி டில்லி வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சீன அமைச்சர்  பேச்சு நடத்த இருப்பதாகவும் அப்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுநாள் வரை இருந்த பகைமை மறந்து இருநாடுகளும் இடப்போகும் முதல் கையெழுத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலையில் கலக்கும் லெனோவா: 2 புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!