Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஜ்பாய் வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.: இம்ரான்கான்

வாஜ்பாய் வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.: இம்ரான்கான்
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (17:51 IST)
கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்றும் இதனை வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்திருந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக எதிர்க்கட்சி ஆனது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 145 தொகுதிகளிலும் 364 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 138 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.

webdunia
இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் பேட்டி ஒன்றில் கூறியபோது, '2004-ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்று கூறினார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் பாமக? துரைமுருகன் போடும் மாஸ்டர் ப்ளான் என்ன?