Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளாமராக உடை அணிந்த நடிகை மீது வழக்குப்பதிவு

கிளாமராக உடை அணிந்த நடிகை மீது வழக்குப்பதிவு
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:43 IST)
எகிப்தில் நடிகை ஒருவர் திரைப்பட விழாவில் தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரைப்பட விழாவிற்கோ அல்லது எதாவது புரோமோஷன்களுக்கு செல்லும் போது அரை குறையாக ஆடை அணிவது வழக்கம். அதிலும் இந்தியாவில் எமி ஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் அரைகுறையாக ஆடை அணிந்து அதனை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் எகிப்தில் ராணியா யூசஃப் என்ற நடிகை கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து வந்தார். அவர் இச்சையைத் தூண்டும் வகையில்' ஆடை அணிந்தததாக கூறி வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
 
இதற்கு பதிலளித்த நடிகை, இது இப்பேற்பட்ட விளைவை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவுக்கு 911, இந்தியாவுக்கு 112 -அவசரகால உதவி செயலி அறிமுகம்