Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:22 IST)
அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் நாய் ஒன்றின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஜோசுவா ஹார்னர் மீது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸாட் ஜோசுவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோசுவா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தான் இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என கூறினார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜோசுவா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டிற்குள் நிழைந்த ஜோசுவா ‘லூசி’ என்ற  நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து அந்த நாயை கண்டுபிடித்து அதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜோசுவா 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழக வருகை..!!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் பிரச்சாரத்தின் போது-அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு!

ராதிகா என்னை மகனே என்று அழைத்தில் தவறில்லை-விஜய பிரபாகரன்!

டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடருவார்..! பதவி நீக்கம் கோரிய மனு தள்ளுபடி.!!

அடுத்த கட்டுரையில்