Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை

பார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை
, திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:50 IST)
பாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொல்ல மறுப்பு தெரிவித்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மர்தானை சேர்ந்தவர் சும்பல் கான்(25). இவர் அங்கு பிரபலாகும் டிவி ஷோக்கலில் நடித்து வந்தார். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் சும்பல் கானை ஒரு தனியார் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத நடிகை, அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சும்பல் கானை சரமாரியாக சுட்டனர்.
webdunia
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நடிகை சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இந்த வழக்கில் முன்னாள் போலீஸ் காவல் நயீம் கட்டாக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய்க்காக சூர்யா செய்யும் உதவி