Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்காலத்தை அறிய சிறந்த வழி எது? ஜாதகமா? கை ரேகையா?

எதிர்காலத்தை அறிய சிறந்த வழி எது? ஜாதகமா? கை ரேகையா?
, செவ்வாய், 19 அக்டோபர் 2010 (18:30 IST)
த‌மி‌ழ்.வெ‌‌ப்து‌னியா.கா‌ம்: ஒரு சிலர் சாலையோரங்களில் இருக்கக் கூடிய ரேகை பார்ப்பவரிடம் சென்று உட்கார்ந்துவிடுகிறார்கள். மற்றொரு பக்கம் உங்களைப் போன்ற ஜோதிடர்கள் இருக்கிறார்கள். இதில் எது சிறந்தது ஜாதகமா? கை ரேகையா? ஒரு தொழிலோ, திருமணமோ, கல்வியோ இதுபோன்றவற்றிற்கு கட்டாயம் எந்த இடத்திற்கு வரவேண்டும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சரியான பிறந்த தேதி, நேரம் இதெல்லாம் இருந்து கணிக்கப்பட்டதாக இருந்தால் ஜாதகத்தை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும். ரேகைகளை எடுத்துக்கொண்டால், சுக்ரன் மேடு, புதன் மேடு இவற்றையெல்லாம் பார்த்து முடிவெடுப்போம். கை ரேகையைப் பொறுத்தவரையில் அவர்கள் எந்தவிதமான வேலையைச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு அதிகாரியாகவே இருந்தாலும் அவர் ஜிம்முக்கு சென்றால் அவருடைய ரேகைகள் கூட அழிகின்றன. அல்லது ரேகை பின்னமாகிறது. அதனுடைய அமைப்புகள் மாறுபடுகிறது.

ரேகையைப் பொறுத்தவரை அது நாடி ஜோதிடம் மாதிரி. அதாவது இரண்டு வருடத்தில் அது வந்துவிடும் என்று சொல்லலாம். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை தசாபுத்தி, அந்தரங் இதையெல்லாம் கணக்கிடுகிறோம்.

அந்தரங் என்றால்?

அந்தரங் என்றால் முக்தியிலேயே அது ஒரு பகுதி. தசா, புக்தி அதற்கடுத்த பகுதி அந்தரங். அதேபோல, விநாடியையே ஜோதிடத்தில் நாம் பிரிக்கிறோம். பிறகு பிறப்புக் கால கிரக அமைப்புகள், தற்கால கிரக அமைப்புகள் இதையெல்லாம் பார்க்கிறோம். குடும்பத்தில் இருக்கக்கூடிய அங்கத்தினருடைய ராசிகளை வைத்து முடிவெடுக்கிறோம். இதையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் இறங்கலாம். ஏனென்றால், பல கோடி கணக்கில் பணத்தை போட்டு அவர்கள் இறங்கும் போது, நாளைக்கு அதில் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் ஒட்டுமொத்த குடும்பமே ரோட்டில் நிற்கக்கூடிய சூழல் எல்லாம் இருக்கிறது. அதனால் அவர்கள் மிகவும் பயந்து எல்லாவற்றையும் கேட்டுச் செய்கிறார்கள். இதுபோன்ற சவாலான விஷயங்களுக்கெல்லாம் ஜோதிடத்தைதான் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டும்.

ரேகையில் என்னவென்றால், நல்ல சுக்ர திசை நடக்கிற ஒருவர் என்றால், அவருடைய கையில் சுக்ரன் மேடு உயரமாக இருக்கும். சுக்ரன் மேடு என்பது கட்டை விரலிற்கு கீழிருக்கும் பகுதி. சுக்ரன் நல்ல வலுவாக இருக்கிறார் என்றால், மற்ற மேடுகளைக் காட்டிலும் சுக்ரன் மேடு உயர்வாக இருக்கும். மேலும் சிறப்பான சுக்ர திசை என்றால் ரோஸ் நிறத்தில் அந்த மேடு மாறும். இதுமட்டுமல்லாமல், நல்ல குறியீடுகள் கவை, அம்பு, திரிசூலம் இதுபோன்ற ரேகைகள் உருவாகும்.

ஜாதகத்தில் மோசமாக சுக்ர திசை இருக்கிறதென்றால் சுக்ர மேட்டில் தீவு, குறுக்கு ரேகைகள், கரும்புள்ளி இதெல்லாம் உருவாகும். குறுக்கு ரேகை என்றால் சிலருக்கு ஒருவித பின்னல் போலவே இருக்கும். இதுபோன்றெல்லாம் வரக்கூடாது. இதுபோல சில விஷங்களுக்கு ரேகைகளையும் ஒப்பிடுகிறோம். ஏனென்றால், ஜாதகத்தில் ராசிக் கட்டத்தைப் பார்த்துவிட்டு நவாம்ச கட்டத்தையும் எடுக்கிறோம். இது எதற்கு என்றால் ரேகைகளுடைய அமைப்பு எப்படி இருக்கிறது என்பதற்காகப் பார்க்கிறோம்.

உடற்கூறுகளை எடுத்துக்கொண்டால் கை ரேகைக்கு சமமாகக் கூறமுடியாது. உடற்கூறுகளில் நோயின் தன்மை, தாக்கம், குணமாகும் காலம் இதெல்லாம் ரேகையில் துல்லியமாக இருக்கலாம். அது ஒரு வகையில் சிறப்பு. இது ஒரு வகையில் சிறப்பு. ஆனால் இது இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்தது.

பொதுவாகவே, குரு திசை நடக்கிறதென்றால் அவர்களுக்கு இயல்பாகவே சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். அந்த திசைக்கு என்ன உரியதோ அதை மேலோங்கச் செய்யும். அதேபோல கை ரேகையில் பார்த்தால் குரு மேடு உயர்ந்திருக்கும். குரு மேடு என்பது ஆள் காட்டி விரலிற்குக் கீழே இருப்பது. பொதுவாகவே குரு மேடு உயர்ந்து நின்றிருந்தாலே ஆசிரியராவார்கள். ஆலோசனை வழங்குதல், உளவியல் நிபுணராகுதல். பிறகு கவுன்சிலிங், சோர்ந்து வருபவர்களை, அதாவது மன உளைச்சலோடு வருபவர்களை, மனம் நலம் குன்றி வருபவர்களை வழி நடத்திச் செல்லுதல். குரு மேடு உயர்ந்திருப்பவர்கள் நிறைய பேரை HOD ஆக எல்லாம் பார்க்கிறோம்.

அடுத்து ஹைக்கூ என்று சொன்னால் புதன்தான். அறிவு வேறு நுண்ணறிவு வேறு. பகுத்தறிவு வேறு பட்டறிவு வேறு. சுண்டு விரலிற்குக் கீழ் இருப்பதுதான் புதன் மேடு. அதில் இரண்டு நேர் கோடுகள் போல் இருந்தால் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுதல், அதாவது ஒப்பிடுதல். புதன் மேட்டில் இரண்டு நேர் கோடு‌க‌ள் இருந்தால், பிரச்சனைகளை அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் ஒப்பிட்டுப் பேசுதல். மேலும் புதன்தான் பிரசண்டேஷன். அதாவது நிறைய பேருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். அதை எடுத்துச் சொல்லும் விதம், வித்தை தெரியாது. அதை உருவாக்குவதுதான் புதன். பொதுவாக ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்து கூடவே சுக்ரனோ, சந்திரனோ சேர்ந்து இருந்தால் திரைத் துறையில் இயக்குனராக இருந்து பல கோடி மக்கள் பார்த்து பயனும்படி நல்ல விஷயங்களை காட்டக்கூடிய நல்ல இயக்குனர்களை பார்க்கிறோம்.

ஆகவே, சில விஷயத்தில் ஜோதிடத்தில்தான் துல்லியமான சில கணக்குகள் தெரியும். சில விஷயங்களுக்கு உடற்கூறுகள் போன்றவற்றிற்கு ரேகை சிறந்ததாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil