Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி நேரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த இருவர்

கடைசி நேரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த இருவர்
, திங்கள், 24 செப்டம்பர் 2018 (10:49 IST)
பிக்பாஸ் வீட்டில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதியான நான்கு பேர் மட்டுமே உள்ளனர். ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேர் மட்டுமே உள்ள நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து மேலும் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

ஆம், ரம்யா மற்றும் வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஐவர் பிக்பாஸ் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இருவரை பிக்பாஸ் தனது வீட்டில் அனுமதித்துள்ளார்.

webdunia
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் திரையில் தோன்றிய பிரபலங்களின் கேரக்டர்களில் நடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ரித்விகாவிற்கு சந்திரமுகி கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போட்டுள்ள தில்லாலங்கடி பிளான்