Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் - வைரமுத்து கண்டனம்

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் - வைரமுத்து கண்டனம்
, ஞாயிறு, 13 மே 2018 (10:56 IST)
இயக்குனர் பாரதிராஜா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்  தெரிவித்துள்ளார்.
கடந்‌த ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பேசியபோது இந்து கடவுள் வினாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக‌ கூறப்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில்‌ புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
webdunia

இந்த நிலையில் புகார்தாரர் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா‌ மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனப்பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.
webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் பட டைட்டில் என்ன தெரியுமா?