Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்கருக்காக பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

ஆஸ்கருக்காக பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரகுமான்
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (20:13 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் மற்றும் ஜெய் ஹோ பாடலுக்காக 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். இவர் ஆஸ்கார் விருது பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 
 
இந்நிலையில் இதை கொண்டாடுவதற்காக மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரகுமான் நகைச்சுவையோடு பதில் அளித்தார். அதவாது, 
 
ஆஸ்கர் வாங்கும் போது பயமான மனநிலை எல்லாம் இல்லை. விருது வாங்கும் போது விழாவில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன். அவ்வளவே! 
 
ஆனால், எனக்கு ஆஸ்கர் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. ஹாலிவுட்டில் அந்த அடையாளம் எனக்குத் தேவைப்பட்டது. இப்போது எங்கெல்லாம் நான் குறிப்பிடப்படுகிறேனோ, அங்குள்ள மக்களுக்கெல்லாம் என் பெயர் தெரிந்திருக்கிறது என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே! தேவ் படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? கார்த்தி சொல்றத கேளுங்க