Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான பால் பணியாரம் செய்ய...!

சுவையான பால் பணியாரம் செய்ய...!
தேவையான பொருள்கள்:
 
பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
தேங்காய் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - சிறிதளவு
சர்க்கரை - தேவையான அளவு 
செய்முறை:
 
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை  சேர்த்து கலந்து வைக்கவும். 
 
அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும்.
 
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில் தயார்செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் ஊற  வைத்து சேர்த்து பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுதானியங்களில் நிறைந்துள்ள அற்புத சத்துக்களும் அதன் பயன்களும்...!