இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.ஏற்கனவே 3-1 என தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணி, இன்றைய ஐந்தாம் டெஸ்ட்டின் போதும் சற்று மந்தமாகவே விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332, இந்திய 292 ரன்கள் எடுத்திருந்தன..மூன்றாம் நாளின் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட் பறிகொடுத்து 154 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஜோரூட்டும் சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். இந்திய அணியின் பவுலரான விஹாரி 3, ஷமியும்,ஜடேஜாவும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.
ஐந்தாவது டெஸ்டில் வெற்றிக்குத் தேவை 464 என்ற இலக்குடன் மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பலத்த இடி காத்திருந்தது. ராகுல் (46) புஜார (0)ஆண்டர்சனின் ஒரே ஓவரில் இருவரும் வீழ்ந்தனர். கோஹ்லியும் வந்த வந்த வேகத்திலேயே ட்க் அவுட்டகி நடையைக் கட்ட இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பறிதாபமாக விளையாடி வந்தது.