Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் தொடக்க விழா இல்லை... பி.சி.சி.ஐ எடுத்த முடிவு ..?

ஐபிஎல் தொடக்க விழா இல்லை... பி.சி.சி.ஐ எடுத்த முடிவு ..?
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (19:38 IST)
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியில் ஐபில் போட்டிகள் நடப்பது வழக்கம். அது இவ்வருடமும் நடக்க இருக்கிறது. ஆனால் சற்று வித்தியாசமாக நடத்த முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வினோத்ராய் கூறியதாவது.
 
இன்று நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கூறியுள்ளோம்.  வரும் காலத்தில் பயங்கரவாதத்திற்கு ஆரதவாக செயல்படும் நாடுகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க இருக்கிறோம்.
 
மேலும் இவ்வாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பிரமாண்டம் இருக்க வாய்ப்பிருக்காது. அந்த செலவுகளுக்கான தொகை மொத்தமும் (கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரில் உள்ள   புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த) 40 வீரர்களின் குடும்பத்திற்காக வழங்கப்படும் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டும்: சச்சின் சர்ச்சை கருத்து