Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் டி20 இறுதிப்போட்டி: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் செய்யும் வங்கதேச அணி

மகளிர் டி20 இறுதிப்போட்டி: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் செய்யும் வங்கதேச அணி
, ஞாயிறு, 10 ஜூன் 2018 (11:36 IST)
பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதித்தொடரில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற  வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
நேற்றைய அரையிருதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி அபார பெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை அடைந்துள்ளது.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்தியா-வங்காளதேச அணிகளுக்கான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோற்ற இந்திய அணி இந்த போட்டியில் வங்கதேச அணிக்க பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவாக் எப்படி பட்டவர்: நினைவு கூரும் சச்சின்!