Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:44 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம் செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.
 
மேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.  
இதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா  6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சூர்யகுமார் & திலக் வர்மா அதிரடி ஆட்டம்… பஞ்சாப்புக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த இலக்கு!

விக்கெட் பிடுங்க புது ப்ராடக்டை டீமில் இறக்கிய CSK..! – இனி அதிரடி ஆட்டம்தான் போல!

’ஆறுச்சாமி’ ஷிவம் துபேவை இந்தியா டீமில் எடுப்பது சிரமம்! – ஏபி டி வில்லியர்ஸ் சொன்ன காரணம் இதுதான்!

தோனியை சமாதானப்படுத்த முடியாது… ஆனா தினேஷ் கார்த்திக்கை?- டி 20 உலகக் கோப்பை குறித்து ரோஹித் அப்டேட்!

இம்பாக்ட் ப்ளேயர் விதியால் கிரிக்கெட்டின் முக்கிய அம்சம் விடுபடுகிறது… அதிருப்தியை வெளிப்படுத்திய ரோஹித்!

அடுத்த கட்டுரையில்
Show comments