Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி
, ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (11:29 IST)
அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கேப்டனாக இருந்து வந்த விராத் கோலியை மாற்றம் செய்ய அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணி என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் இதுவரை அவர்களால் பட்டம் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் நிர்வாகம் அணி வீரர்களை கோடிக்கணக்கில் போட்டு ஏலம் எடுத்தாலும்  கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது.
webdunia
அந்த அணியின் கேப்டனாக இருக்கும் கோலி தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஒரு கேப்டன் முறையில் அவர் சிறப்பாக செயல்படாததாலேயே பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் நிர்வாகிகள் குருதுகின்றனர்.
webdunia

ஆகவே வரும் போட்டியில் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, அந்த பதவிக்கு டிவில்லியர்சை கேப்டனாக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - டென்ஷனால் தோல்வியடைந்த செரினா வில்லியம்ஸ்