Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா...
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:36 IST)
ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றதால் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி சரித்திர சாதனையை பதிவு செய்துள்ளது. 
தொடரில் யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 48. 4 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய  இந்திய அணி கடுமையாக சவாலை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா பந்து வீச்சை சமாளித்து விளையாடியது.
 
இதில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 49.2 ஓவரில் 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்து களத்தில் அவுட்டாகாமல் இருந்தார். தோனியுடன் கைகோர்த்த ஜாதவ் 61 ரன்கள் எடுத்து  இறுதி வரை களத்தில் நின்றார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்...