Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோகித், கோலி அதிரடியில் கதிகலங்கிய இலங்கை

ரோகித், கோலி அதிரடியில் கதிகலங்கிய இலங்கை
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (18:10 IST)
நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது, முதல் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காவது போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் சேர்ந்து இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய விராட் கோலி 96 பந்துகளில் 131 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
அதைத்தொடர்ந்து பாண்டியா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். பாண்டியா ஒருபக்கம் வழக்கமாக அவரது ஸ்டைலில் ஆட மறுமுனையில் ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார். ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் வெளியேற, அடுத்த பந்தில் ரோகித் சர்மாவும் வெளியேறினார்.
 
அதன்பிறகு வந்த ராகுல் 7 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தோனி மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் இணைந்து விளையாட தொடங்கினர். நிதானமாக ஆடி கடைசியில் வெளுத்து வாங்கினர். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே 42 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். தோனி 42 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#dhoni300 டிரண்டாகும் ஹேஷ்டேக்!!