Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (22:01 IST)
லண்டலில் நடைபெற்று வந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளூக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்து அணி 464 ரன்கள் இலக்கு கொடுத்திருந்தது. இந்த நிலையில் புஜாரே மற்றும் விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும், தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர். இருப்பினும் ராகுல் சிறப்பாக விளையாடி 149 ரன்களும், பேண்ட் 114 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ராகுல், பேண்ட் இருவரும் அவுட்டான நிலையில் இந்திய அணியின் மற்ற விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களில் இழந்தது.

இறுதியில் இந்திய அணி 94.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 345 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments