Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

45 ரன்களில் ஆல்-அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபம்

45 ரன்களில் ஆல்-அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபம்
, சனி, 9 மார்ச் 2019 (08:55 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 87 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீர்ர் சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
 
webdunia
இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத் சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி