Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதம் அடித்து அசத்திய தவான்: விறுவிறுப்பாக செல்லும் 4வது ஒரு நாள் போட்டி

சதம் அடித்து அசத்திய தவான்: விறுவிறுப்பாக செல்லும் 4வது ஒரு நாள் போட்டி
, ஞாயிறு, 10 மார்ச் 2019 (15:48 IST)
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில் தவான் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
 
மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தவான், ரோஹித் சிறப்பாக விளையாடினர்.
 
ரோஹித் 92 பந்துகளுக்கு 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் அவுட்டானார். 100 ரன்களை கடந்து தவான் விளையாடி வருகிறார். 34 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 210 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4வது ஒருநாள் போட்டி: முதல் பேட்டிங்கில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்