Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8000 பாரத் ஆர்மி ரசிகர்கள் – உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து பயணம் !

8000 பாரத் ஆர்மி ரசிகர்கள் – உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து பயணம் !
, வெள்ளி, 22 மார்ச் 2019 (10:50 IST)
இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்காக 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் பாரத் ஆர்மி ரசிகர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.

இங்கிலாந்து அணியை ஆதரிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பார்மி ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கி இங்கிலாந்து அணி சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் போது மைதானத்திற்கு சென்று அவர்களை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தின் பார்மி ஆர்மி போல இந்திய அணியை ஊக்குவிப்பதற்காகவும் பாரத் ஆர்மி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரமாக இந்திய அணிக்கு உத்வேகம் கொடுத்தனர். இந்திய அணியும் தொடரை வென்ற போது அவர்களோடு சேர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

வரும் மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக பாரத் ஆர்மியை சேர்ந்த 8000 கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்ய இருக்கின்றனர். இதற்காக 22 நாடுகளில் உள்ள பாரத் ஆர்மி உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்த பாரத் ஆர்மி அமைப்பு 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது நான்கு ரசிகர்களால் தொடங்கப்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு குறித்து பாகிஸ்தான் முக்கிய முடிவு!