பணத்திற்காக கிரிக்கெட் அல்ல என்பதை உணர்ந்தேன் - ராபின் உத்தப்பா
, சனி, 30 நவம்பர் 2013 (17:19 IST)
ராபின் உத்தப்பா என்ற ஆக்ரோஷமான துவக்க வீரர் இந்தியாவுக்கு கடைசியாக விளையாடியது 2008ஆம் ஆண்டு. இவர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரட் லீயின் பந்தை ஒரு டென்னிஸ் ஷாட் ஆடி நேராக சிக்சர் அடித்ததை மறக்க முடியாது.
இவரது கிரிக்கெட் கரியர் இன்னும் முடிந்து விடவில்லை. ஐபிஎல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடினார். அப்போது ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ல் ஒரு 175 ரன்களை விளாசியபோது விக்கெட் கீப்பராக இருந்து ரசித்த உத்தப்பா கிறிஸ் கெய்ல்தான் எனக்கு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
பெல்ஜியத்திற்கு உத்தப்பா சுற்றுலா சென்ற போது 10 நாட்கள் தனியாக கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யோசித்துள்ளார்.