Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெற்றியில் திருநீறு வைப்பதால் கிடைக்கும் பலன்கள்...!

நெற்றியில் திருநீறு வைப்பதால் கிடைக்கும் பலன்கள்...!
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம்  இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
மனித உடலில் நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
 
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றனர்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையைச் கொடுக்கின்றது.
 
இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்புகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும்  வெப்பத்தை நீக்குகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-09-2018)!