Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் குரலில் இளைஞர் ஆபாச பேச்சு ! புரட்டி எடுத்த வாலிபர்கள்...

பெண் குரலில்   இளைஞர் ஆபாச பேச்சு ! புரட்டி எடுத்த வாலிபர்கள்...
, புதன், 12 டிசம்பர் 2018 (10:03 IST)
சென்னை வேளச்சேரியில் தண்டீஸ்வரம் பகுதியில் பர்த அணிந்த ஒருவர் அவ்வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இளைஞர்கள் சிலர் அங்கு நின்றிருந்தனர்.அவர்களை நெருங்கிய அவர் சாதாரணமாக பேசியவர் பின் அடுத்தடுத்து கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். இதனால் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பர்தா அணித்திருந்த பெண்ணின் குரல் இயல்பானதல்ல என்று முடிவு செய்து பர்தாவை விலக்கி பார்த்தனர்.அப்போதுதான் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிந்தது. பின் ஆத்திரமைடைந்த இளைஞர்கள் பர்தா அணிந்தவரை நன்றாக கையால் கவனித்துள்ளனர்.
 
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரித்தனர். அதில் ’அந்த நபரின் பெயர் சங்கர் .கோடம்பாக்கத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வரும்  என்ஜினியர் என்றும், தன் நண்பர்களுடன் இணைந்து  ஒரு வெப்சீரியல் நிகழ்ச்சிக்காக இப்படி நடிக்க முயற்சிக்கும் போது இளைஞர்களிடம்    மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
 
ஆனால் சங்கரிடம் வேறும் இல்லாததால் சந்தேகித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு கடத்தலாம் ஆனால் 6 மாதம் ஆகும் – விஜய் மல்லையா வழக்கில் புது சிக்கல் ?