Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு

தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு
, வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (12:25 IST)
நேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது

இந்த நிலையில் நேற்று வேலூர் - திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு பெண்ணாக பேருந்தை வழிமறித்த அந்த பெண் திமுக தொண்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

webdunia
இந்த நிலையில் தன்னந்த்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் தெய்வநாயகி என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பேரில் இன்று அவர் அண்ணா அறிவாலயம் வருகை தந்து ஸ்டாலினை சந்தித்து ஆசிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணைவேந்தர் நியமனம் - கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக?