Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலக தயார் - அமைச்சர் வேலுமணி பேட்டி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (15:22 IST)
தன் மீதான குற்றத்தை நிரூபித்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத்தயார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

 
உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி அமைச்சர் வேலுமணி பல கோடி ஆதாயம் பெற்றுள்ளார் என டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு, பினாமி பெயரில் நிறுவனங்கள் நடத்தி ஒப்பந்தங்களை அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
எனவே, வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும்,  இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், திமுக தரப்பு நீதிமன்றத்திற்கு செல்லும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வேலுமணி ‘என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது. அதை நிரூபித்தால் நான் அமைச்சர் பதவியை விட்டு விலக தயார். அதேபோல், திமுகவினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. எனவே, ஸ்டாலின் அவரின் திமுக தலைவர் பதவியை விலக வேண்டும். அவர் விலகினால் நானும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!

பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு.. 13 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு..!

சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை..! அண்ணாமலை புகார்..!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments