Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்னத்திரை நடிகை கணவருடன் திடீர் கைது: சொகுசுக்கார்கள் பறிமுதல்

சின்னத்திரை நடிகை கணவருடன் திடீர் கைது: சொகுசுக்கார்கள் பறிமுதல்
, சனி, 8 செப்டம்பர் 2018 (21:42 IST)
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சின்னத்திரை நடிகை அனிஷா என்கிற பூர்ணிமா மோசடி புகார் ஒன்றில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டார். இவர்களுடன் மேலும் இரண்டு பேர்களை போலீசார் கைது செய்தனர். சின்னத்திரை நடிகை அனிஷாவும் அவருடைய கணவரும் 103 ஏசி மற்றும் 116 சொகுசுக்கார்களை வாங்கி மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னத்திரை நடிகை அனிஷாவும் அவருடைய கணவரும் மின்சாதன பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் நிறுவனத்திற்காக கே.கே.நகரில் உள்ள ஒரு கடையில் 103 ஏசி பொருட்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அனிஷாவும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்ட நிலையில் அனிஷாவின் கணவர் தலைமறைவானார். அனிஷாவின் கணவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவரும் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் சொகுசுக்கார்களை வாடகைக்கு விடுவதாக கார் உரிமையாளர்களிடம் வாங்கி அந்த கார்களின் ஒரிஜினல் டாக்குமெண்ட் மூலம் கோடிக்கணக்கில் பணம் முறைகேடாக பெற்றுள்ளதாகவும் அனிஷா மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு மாதம் 144 தடை உத்தரவு: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு