Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி என்ன தீவிரவாதியா? - தினகரன் விளாசல்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (14:02 IST)
தமிழக காவல் துறை நடுநிலை வகிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையின் இழந்து விடக்கூடாது என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி, 2015ம் ஆண்டு போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்தார் எனவும், மற்றொருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்தார் எனவும் சென்னை நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த புகாரில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். எந்த இரண்டு வழக்குகளும் தற்போது நிலுவையில் இருக்கிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை செய்வதற்காக, தமிழக போலீசார் நேற்று கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றனர். ஆனால், அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி மற்று பழனியப்பன் ஆகியோரை ஏதோ தீவிரவாதியை தேடுவது போல் போலீசார் தேடுகின்றனர். காவல்துறை நடுநிலை வகிக்க வேண்டும். ஒரு  தரப்பினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு மக்களிடம் உங்களுக்குள் நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்.  வழக்கு இருந்தால் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வரப்போகிறார்.
 
எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனவர் இல்லை. சந்தர்ப்பம் காரணமாக முதல்வர் ஆனவர்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

ஆர்சிபியா? சிஎஸ்கேவா? பெங்களூரில் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறிய சுவாரஸ்ய பதில்..!

வயநாடு தொகுதியில் பின் தங்குகிறார் ராகுல் காந்தி.. உள்ளூர் ஊடகத்தின் கருத்துக்கணிப்பு.!

அமைச்சர் நிதின் கட்காரி மருத்துவமனையில் அனுமதி.. தேர்தல் பிரச்சாரத்தின்போது மயக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments