Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி விவகாரம் - தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் - தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
, புதன், 16 மே 2018 (12:27 IST)
காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 14ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 
 
இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசின் சார்பில் 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
 
# காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
# காவிரி மேலாண்மை வாரியம் தலைமயகத்தை கர்நாடகத்தில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும்.
 
என இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்வழக்கு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முதல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் மாயம் - கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு