Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு

நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு
, திங்கள், 14 மே 2018 (16:00 IST)
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இடதுசாரித் தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
காவிரி விவகாரத்தில் இன்று மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைவு திட்டம் குறித்த மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழக்கு 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இந்த வரைவு திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமரை கண்டிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய மன்மோகன் சிங்