Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் வேலுமணி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (16:14 IST)
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு குறித்த செய்தியும், அதற்கு வேலுமணி விடுத்த சவாலும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு அளித்தால் தான் அமைச்சர் பதவியை துறக்க தயார் என்றும், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலகவும் தயார் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்

இந்த நிலையில் உள்ளாட்சி துறை ஊழல் குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய அமைச்சர் வேலுமணி தயாரா என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சவால் விட அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, 'பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வேலைக்கு பெட்டிசன் கொடுக்கும் பியூன் வேலை பார்ப்பவர் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார். மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல எங்கள் கட்சியில் கீழ்மட்டத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments