Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் ஓடும்: தென்னக ரயில்வே

நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் ஓடும்: தென்னக ரயில்வே
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:39 IST)
கஜா புயல் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், ஒருசில ரயில்கள் வேறு மார்க்கத்தில் மாற்றிவிடப்பட்டும் இருந்த நிலையில் நாளை முதல் ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் ஓடும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறையின் பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'கஜா புயலால் 9 விரைவு ரயில்கள், 14 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தன. மேலும் திருச்சி, மதுரை ரயில் கோட்டங்கள் கஜா புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. பாதிப்பு அடைந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மீட்புப்பணிகள் இன்று இரவுடன் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை நாளை காலை முதல் வழக்கம்போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வழக்கமான ரயில் பிரயாணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியுமா....! கேமரா மூலம் கண்காணிக்கும் முதல்வர்...