Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞரிடம் 10 ரூபாய் வாங்க முடியவில்லை – திமுக தொண்டர்கள் வருத்தம் !

கலைஞரிடம் 10 ரூபாய் வாங்க முடியவில்லை – திமுக தொண்டர்கள் வருத்தம் !
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:57 IST)
திமுக என்ற கட்சித் தொடங்கி 72 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 72 ஆண்டுகளில் கலைஞர் இல்லாமல் முதல்முறையாக திமுகவினர் பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்போதும் பொங்கல் பண்டிகையின் அளவற்ற அபிலாஷை உண்டு. தான் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் முதன் முதலாகப் பொங்கல் பண்டிகையான தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.

அதுபோலப் பொங்கல் பண்டிகையின் போது தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு பொங்கல் பரிசாக 10 ரூபாய் தாள் ஒன்றை அளிப்பார். திமுக வின் தற்போதையத் தலைவரான ஸ்டாலின் முதல் திமுக வின் கடைக்கோடி தொண்டன் வரை அனைவருக்கும் இந்த பத்து ரூபாய் பரிசுதான்.

ஆனால் கலைஞர் கையால் அந்த பத்துரூபாய் வாங்க வேண்டுமென்று 1000 ரூபாய் செலவு செய்து ஊரில் இருந்து சென்னைக்கு சென்ற தொண்டர்கள் கதையும் உண்டு. ஆனால் இம்முறை கலைஞர் இல்லாததால் அறிவாலயத்தில் பொங்கல் பண்டிகைகள் எளிமையான முறையில் நடந்து முடிக்கின்றன.

பொங்கல் கொண்டாட அறிவாலயம் வந்திருந்த தொண்டர்களும் பழையக் கதைகளைப் பேசிவிட்டு சோகமாக சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பமேளாவில் பங்கேற்ற மக்களை போட்டோ பிடித்த இஸ்ரோ....வைரலாகும் புகைப்படங்கள்