Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார், யார் தனித் தொகுதியில் போட்டியிடலாம்?; சாதி சான்றிதழ் அவசியம்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:21 IST)
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடைபெற இருக்கிறது.
 

 
திங்கட்கிழமை முதல் (26.09.16) தொடங்கிய உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுவுள்ளது.
 
அக்டோபர் 6ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
 
தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்புமனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட (தனித்) தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்பவர்கள், அத்துடன் சாதி சான்றிதழ் இணைப்பது அவசியம் ஆகும்.
 
கலப்புத் திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட  பிறப்பால் எஸ்சி எஸ்டி பிரிவினை சாராதவர்கள் எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை.
 
ஆனால் மதம் மாறிய, பிறப்பால் எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்தவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிடுவதில் பிரச்சினையுள்ளது.

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு.! விழித்துக் கொள்வாரா ஸ்டாலின்.? அண்ணாமலை..!!

ப சிதம்பரம் கனவு ஒருபோதும் பலிக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி..!

வி.ஆர்.மால் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை.!!

குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி.? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments