Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சென்னை நிருபர் ’ தாக்குதல்! ஸ்டாலின் மறுப்பு : உண்மை நிலவரம் என்ன...

’சென்னை நிருபர் ’ தாக்குதல்! ஸ்டாலின் மறுப்பு : உண்மை நிலவரம் என்ன...
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:41 IST)
கடந்த திங்கள் கிழமை அன்று வைகோ தலைமையில் ராஜிவ் கொலை குற்றவாளிகளான நளினி, சாந்தன், பேரறவாளன் போன்ற ஏழுபேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றபோது ’மிரர் நவ்’ என்ற ஆன்லைன் பத்திரிக்கையில் பணியாற்றும் நிருபர் பிரனவ் மாதவ் மீது திமுக கட்சி  உறுப்பினர் தாக்குதல் நடத்தினார் என்று இப்பிரச்சனை  நாடுமுழுவதும் பத்திரிக்கையாளர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய ஸ்டாலின் :
 
சென்ற திங்கட்கிழமை ராஜ்பவன் எதிரில் உள்ள டீக்கடையில் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. பிரனவ் மாதவ் மீது தாக்குதல் நடத்திய நபர் திமுக கிடையாது என்று கூறினார்.
 
இந்நிலையில் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பிரனவ் மாதவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
 
பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தை முடக்குவது போன்ற இது போன்ற தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என நாடெங்கிலும் வேண்டுகோள் வலுத்து வருகிறது.
 
பாதிக்கப்பட்ட மாதவ் தற்போது ராஜிவ் காந்தி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்லே முளைக்காதாம், இதுல தாமரை எங்கிருந்து மலரும்: தமிழிசையை வம்பிழுத்த ஸ்டாலின்