Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை கடலோர மாவட்டங்களில் மழை ? – சென்னை வானிலை மையம் தகவல்

நாளை கடலோர மாவட்டங்களில் மழை ? – சென்னை வானிலை மையம் தகவல்
, புதன், 12 டிசம்பர் 2018 (14:01 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு சீராக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் பலமான காற்று வீசும் எனவு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாநிலத் தேர்தல் எதிரொலி – விவசாயக் கடன் தள்ளுபடியா?