Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

காவிரி வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை
, திங்கள், 14 மே 2018 (07:39 IST)
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதை அடுத்து இன்றாவது தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் இன்று செயல் திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தல் காரணமாக ஒருசில காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்த மத்திய அரசு, தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் இன்றைய விசாரணையின்போது செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்களின் பேச்சுக்கள் இதனை உறுதி செய்துள்ளது.
 
webdunia
மேலும் மத்திய நீர்வளத்துறை செயலாளார் யூ.பி.சிங் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராவார் என்றும், அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் காவிரி குறித்த செயல் திட்ட வரைவை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக அரசு இன்னும் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடவில்லை. இதுகுறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இன்று நீதி கிடைக்குமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக தேர்தல் முடிந்ததும் விலையேறிய பெட்ரோல்-டீசல்