Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபம் 2 படத்திற்கு வந்தது சிக்கல்: சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!

விஸ்வரூபம் 2 படத்திற்கு வந்தது சிக்கல்: சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
, வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (20:30 IST)
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விஸ்வரூபம் 2 படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தை வெளியிட தடை விதிக்ககோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
 
இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட பணத்தை உன்னைபோல் ஒருவன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஸ்வரூபம் 2 படத்திற்கும் கமல் பலரிடம் கடன் வாங்கியிருப்பதால், கமல் மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.
 
இல்லையெனில், விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ஆர்.கே.நகர் ப்ளான் போடும் தினகரன்?