Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி - மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி - மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (11:17 IST)
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. 
 
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும்,  ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து உமா உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டில் ரூ.600 கோடி வரை பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. 
 
லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பல முக்கியத் தகவல்களை கேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு சம்மந்தம் இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்திவிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

87 வயது மனைவியை எரித்துக் கொன்ற 91 வயது முதியவர்